லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டிபோட்டாலும், ஆயிரக்கணக்கான எம்பிபிஎஸ் சீட் இருக்கு. கஷ்டப்பட்டா கிடைச்சிடும்.

ஆயிரக்கணக்கான எம்பிபிஎஸ் டாக்டர்கள் போட்டிபோட்டாலும் நூத்துக்கணக்கான எம்டி சீட் இருக்கு. முட்டிமோதினா வாங்கிடலாம். 


ஆனா, ஒரே ஒரு சீட்டுக்காக எழுதுற பரிட்சையிருக்கே... கொடுமையிலும் கொடுமை, அவஸ்தையிலும் அவஸ்த்தை. ஸ்டெத்தாஸ்கோப் இல்லாமலே இதயத்துடிப்பு கேட்கும். 

மூச்சு தாறுமாறாகும். 
எழுதி முடிச்சதும் ரிசல்ட்டுக்காக காத்திருக்குறது இன்னும் கொடுமை, நரகவேதனை. 
தூக்கம் மறந்து போகும். காரணமில்லாம தனக்குத் தானே சிரிக்க வைக்கும். 
மருந்தில்லாத வியாதி. 
இதெல்லாம் தெரிஞ்சும், கோடிக்கணக்கானவங்க ஆயிரக்கணக்கான வருஷமா இந்த பரிட்சையை எழுதிக்கிட்டுதான் இருக்காங்க.