
NDTVயின் இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் ஹிந்தி படிக்க விரும்புவதாகவும், அதற்கு இங்கு வழி இல்லாததாகவும், அதனால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையை எழுதியிருப்பவர் திரு.ஸாம் டேனியல் என்னும் NDTV நிருபர். அவரிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன் :
தமிழகத்தில் ஹிந்தி படிக்க வழியில்லையா என்ன ?
இங்கே உள்ள அத்துனை சிபிஎஸ்ஸி பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா ?
வெளிமாநிலத்திலிருந்து வந்துள்ள பெற்றோர்கள் தமிழக அரசிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்கள் என்று சொல்லியுள்ளீர்கள்.எத்துனை பேர் வழக்கு தொடுத்துள்ளார்கள் ? வழக்கு என்னவாயிற்று ?
"ஐய்யோ கொடுமை, ஹிந்திக்கு இழைக்கப்படும் அநீதி" என்கிற ரீதியில் வருத்தப்படுகிறீர்களே, இங்கிருந்து சென்று டெல்லியில் வாழ்பவர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க விரும்பினால் எத்துனை வாய்ப்புகள் உள்ளன ? அ
தே அங்கிருந்து வந்து இங்கே வாழ்பவர்களின் குழந்தைகள் ஹிந்தி படிக்க எத்துனை வாய்ப்புகள் உள்ளன ?
சரி, இங்கே, "எங்களுக்கு தமிழ் வேண்டாம், ஹிந்தி மட்டுமே படிக்க விரும்புகிறோம்" என்று சொல்லும் மாணவர்கள் எத்துனை சதவிகிதம் ? அவர்களை ஹிந்தி படிக்கவிடாமல் யாராவது தடுக்கிறார்களா ?
ஹிந்தி பிரச்சார சபா என்று ஒன்று உள்ளது உங்களுக்கு தெரியுமா தெரியாதா ? அங்கே ஹிந்தி படிக்க பல உதவிகள் கிடைக்கிறதே ?
ஆனால், டெல்லியில் எத்தனை பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பதை உங்களால சொல்ல முடியுமா ?
தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளில் தமிழே சொல்லிக்கொடுப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா ?
+2வில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் தேர்ச்சி பெற முடியும். ஆனால், டெல்லியில் ஹிந்தி படிக்காமல் யாராவது தேர்ச்சி பெற முடியுமா ?
தமிழகத்தில் அரசு பள்ளிகளிலும், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளிலும் மட்டுமே தமிழ் கட்டாயம். இதில் என்ன தவறு இருக்கிறது ?
நீங்கள் சார்ந்திருக்கும் வடக்கிந்திய தொலைக்காட்சி என்ன எழுத சொன்னாலும் அதை அப்படியே எழுதுவீர்களா ? யோசியுங்கள் .
உங்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முதலில் தமிழகத்தின் முழுமையான வரைபடம் இருக்கிறதா இல்லையா என்று எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. காரணம், சிவகாசி வெடிவிபத்து நடந்தபொழுது, வரைபடத்தில் சென்னையைக் கோடிட்டு காட்டியவர்கள் தானே உங்கள் நிறுவனம்.
"மெட்றாஸ்" மட்டும் தான் தமிழகத்தின் அடையாளமா ?
கடைசியாக ஒன்று.
பசிக்காக எலும்புத்துண்டை கவ்விக்கொண்டிருப்பது அவரரவர் விருப்பம். ஆனால் எலும்பைக் கவ்விக்கொண்டே இங்கே வந்து ஊளையிட முயற்சிப்பது கூடாது. நன்றி விசுவாசத்திற்காக சோறு போடுவர்களுக்கு வாலாட்டலாம். தப்பில்லை. ஆனால், அதே வாலை எங்களிடம் காட்டினால் ஜாக்கிரதை...ஒட்ட நறுக்கிவிடுவோம்.
-பாலாஜி.