"தீ விபத்தால் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் நடிகை சுகுமாரியை,மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர்" -செய்தி.


சில சந்தேகங்கள் 
***************
# "அமைச்சர்கள் தன்னிடம் தெரிவிக்காததால் தான், தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு நிலவுவது தனக்கு தெரியவில்லை" என்று காரணம் சொன்ன முதல்வருக்கு, நடிகையின் தீ விபத்து செய்தி மட்டும் உடனே தெரியவந்தது எப்படி ? 


# மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, திரு.வைகோ பல நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட பொழுது, "எதற்காக நடைபயணம் இருக்கிறார்" என்றே தெரியாத முதல்வருக்கு, நடிகை பற்றிய செய்தி மட்டும் எப்படி தெரியவந்தது ? 


# கல்லூரிகளுக்கு அரசாங்கமே விடுமுறை அளிக்கப்படும் அளவிற்கு மாணவர் போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில்,பேச்சுவார்த்தை நடத்தி அதை முடிவிற்கு கொண்டு வர, நேரமில்லாத முதல்வருக்கு , நடிகையை சந்திக்க மட்டும் நேரமிருக்கிறதா ?

அப்படியானால் தமிழகத்தில் உள்ள பொறியியல், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளை சினிமாக் கல்லூரிகளாக மாற்றி, எல்லாருக்கும் அரிதாரம் பூசி நடிகர்களாக்கிவிடட்டும் . அப்பொழுதாவது முதல்வரை சந்திக்க முடியுமே.


# தமிழகத்தில் உள்ள (?) கூடங்குளத்தில், 500 நாட்களுக்கு மேல் மீனவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒரு முறை சந்தித்து பேச நேரமில்லாத முதல்வருக்கு, நடிகையை சந்திக்க மட்டும் நேரமிருக்கிறதா ?


# முதல்வர் சினிமாத்துறையில் உள்ளவர்களை மட்டும் தான் சந்திப்பாரா ?


தங்கத்தாரகை-காவிரித்தாய்-ஈழ அன்னை-இதய தெய்வம்-மாண்புமிகு-புரட்சித்தலைவி டாக்டர்.அம்மா அவர்கள் இதற்கு பதில் சொல்வாரா ?

பாலாஜி.