சில நாட்களுக்கு முன், ஒரு பத்திரிக்கை, தமிழகத்தின் பல இடங்களில் சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றுள்ளனர்.

என்ன சர்வே அது ?
"தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கிறதா இல்லையா" என தெரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட சர்வேயா ?
இல்லை.

"பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாமா கூடாதா" என்ற சர்வேயா ?
இல்லை.

"இந்தியாவிற்கு அணுவுலை தேவையா இல்லையா?" என்ற சர்வேயா ?
இல்லை.

"குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது சரியா தவறா" என்ற சர்வேயா ?
இல்லை.

"தமிழகத்தின் முக்கியமான பிரச்சனை எது" என தெரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட சர்வேயா ?
இல்லை

"வரும் நாடாளுமன்றத்தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்" என்ற அரசியல் சர்வேயா ?
இல்லை.
இல்லவே இல்லை.

வேறு எதற்காகத்தான் இந்த சர்வே நடத்தப்பட்டது ? 
வேறு எதற்காக... "அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?" என தெரிந்துகொள்வதற்காக நடத்தப்பட்ட சர்வே தான் இது.
தமிழகத்தின் முக்கியமான பிரச்சனையா இது ? 
இதற்கெல்லாம் ஒரு சர்வே. 


இதற்காக பலர், தங்கள் நேரத்தை வீணடித்துவிட்டு வந்து அஜித்,விஜய்,தனுஷ் என வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். இந்த சர்வேயால் யாருக்கு என்ன பலன் ? 

இன்னும் எத்தனைக் காலத்திற்கு தான் நாம் சினிமா நடிகர்களுக்கு அடிமையாக இருக்கப்போகிறோமோ ?