"டாக்டர்களே சிகரெட் பிடிக்கிறார்கள். குடிக்கிறார்கள்! ஏன் எங்கள மட்டும் குடிக்காதீங்கனு அட்வஸ் பண்றீங்க?”

“உண்மை தான். டாக்டர்கள் பலர் சிகரெட் பிடிக்கிறார்கள். பலருக்கு குடிப்பழக்கமும் இருக்கு. மறுக்கவில்லை. சிகரெட்டில் இருக்கும் நிகோடின் என்னும் வேதிப்பொருள் addiction (போதைக்கு அடிமையாக்கும் தன்மை) தன்மையுடையது. ஒரு முறை ஆரம்பித்துவிட்டால் நிறுத்துவது கடினம். மேலும் மேலும் தேவைப்படும். அதனால் தான் அந்த பழக்கத்தை ஆரம்பித்த பல மருத்துவர்களாலேயே அதை நிறுத்தமுடியவில்லை. ஆரம்பத்தில் ஒரு சிகரெட் குடிப்பவர்கள் நாளடைவில் நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் குடித்தாலும் போதாது. பத்தாது. மூளை இருக்கும் சில பகுதிகள் “இன்னும் வேண்டும் ! இன்னும் வேண்டும்” என்று அவனை கட்டாயப்படுத்தும். சிகரெட் அவ்வுளவு addicitive தன்மையுடையது.

சிகரெட் குடிப்பதால் ஏற்படும் மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகளால் பல மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதனால் தான் பல மருத்துவர்கள் இந்த புகைபழக்கத்தை நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

சிகரெட் பழக்கம் என்பது ஒரு நோய். மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் ஏற்படுவது. இந்த நோய் மருத்துவர்களை மட்டுமல்ல, ஆசிரியர்கள், நீதிபதிகள், விஞ்ஞானிகள், அமைச்சர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் என அனைவரையும் பாகுபாடில்லாமல் தாக்கும் சக்திபடைத்துள்ளது. சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் மற்றும் மாரடைப்பு அனைவருக்கும் ஏற்படும். மருத்துவர்களுக்கும் வரும்.

அதனால் "மருத்துவர் குடிக்கிறார், நானும் குடிப்பேன்" என்பது வீண் வாதம். எல்லாருக்கும் ஒரே மாதிரி உடல், ஒரே ஒரு உயிர் தான். சிகரெட் பிடிப்பதை இன்றே நிறுத்த முயற்சி செய்யுங்கள். அருகில் உள்ள மனநல மருத்துவரை நாடுங்கள்”

- மரு.பாலாஜி