இன்னைக்கு கிராமங்கள்ல உள்ள வீடுகளுக்கு போய் ,சுகாதார பணியாளர்கள், சரியா மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தாங்களானு சரி பார்த்தேன். 

காலையில இருந்து சாயங்காலம் வரை தெருத் தெருவா அலைஞ்சேன். உதவிக்கு ஒரு ASHA ( social health activist ,திருமணமான பெண் ) கூடவே வந்தார்.


என்னோட பேசிக்கிட்டே வருவார். ஆண்கள் யாராவது எதிரே வந்தா, உடனே முகத்த மூடிப்பார்-இது ஹரியானா வழக்கம்.
திருமணமான பெண்களுக்கு மட்டும் தான் இந்த கட்டுப்பாடு. ஆரம்பத்துல எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு. ஆனா போகப் போக கோவம் வந்துச்சு.



"பெண்கள் வெக்கத்துல முகத்த மூடிக்குறாங்க"னு நினைச்சா அது தப்பு .
தன்னோட முகத்த, வயசுல பெரிய ஆண்கள்கிட்ட காட்ட கூடாதாம். மீறி முகத்த மூடாம தெருவுல நடந்தா, "அந்த வீட்டு மருமகள பாரு..வெக்கமே இல்லாம தெருவுல நடக்குறா"னு கிராம மக்கள் அவதூறு பேச ஆரம்பிச்சுடுவாங்களாம்.



முகத்த மூடிக்கிட்டு தெருவுல நடக்குறது எவ்வுளோ சிரமமா இருக்கும் ?எருமைகளுக்கு தீனி போட தலையில பெரிய பெரிய புல் கட்டுகளோட, முகத்த துணியால மூடிக்கிட்டு,தெருவுல பெண்கள் நடந்து போறது மனசுக்கு கஷ்டமா இருக்கும்.



நிமிஷத்துக்கு ஒரு தடம் முகத்த மூடுறது ரொம்ப சிரமம். இத எந்த பெண்ணும் விரும்பி செய்யறது இல்லை. கட்டுப்பாடு.(நம்ம ஊர்லயும், நிமிஷத்துக்கு ஒரு தடவ , சேலைய சரி செய்யுற பெண்கள பார்த்திருக்கேன். அதுக்கு வேற காரணம்.)


"திருமணமான பெண்ணை வேற ஆண் பார்க்கக் கூடாது. அதுக்கு தான் முகத்த மறைக்குறாங்க"னு காரணம் சொன்னாங்க. சின்ன வயசு பெண்கள் முகத்த மூடுறதுல இந்த காரணம் சொல்லலாம்.ஆனா 40,45 வயசு பெண்ணும் வயசுல பெரிய ஆண்கள பாத்தா முகத்த மூடிக்கொள்வார். இதுல என்ன லாஜிக் இருக்கு ?


பல இடங்கள்ல ,எதிர்ல வந்த பெண்கள பார்த்து, "யார் இது ? தெரியலையே.முகத்த திறந்து காட்டுங்க "னு ASHA சொன்னார். முகத்த திறந்ததுக்கு அப்புறம் தான் பேச ஆரம்பிச்சார் .


ஆஹா.
மனுசங்க நாம நல்லாவே முன்னேறி இருக்கோம்.


இந்த போட்டோவ ராக்கெட்டுல ஒட்டி, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புங்க. அங்க உயிரினம் இருந்தா,'பூமியில மனுசனுங்க எவ்ளோ முன்னேறி இருக்குறாங்க'னு தெரிஞ்சிகட்டும்

பாலாஜி.